அம்பை: பாலா இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையிடப்பட்ட ‘அவன் இவன்’ படத்தில் சிங்கம்பட்டி ஜமீன், காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில் பற்றிய சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் இடம்பெற்றதாக அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தொடர்பான விசாரணை அம்பை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி டைரக்டர் பாலா நேரில் ஆஜராகினார். அப்போது மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் நடத்திய விசாரணையின்போது படத்தில் வரும் கதாபாத்திரமும், கதையும் கற்பனை என்றும்,