பட்டிவீரன்பட்டி: பட்டிவீரன்பட்டி அருகே சாலையோரத்தில் விவசாய விளைபொருட்கள் கழிவுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள அய்யம்பாளையம், சித்தரேவு, சிங்காரக்கோட்டை, நரசிங்கபுரம், கதிர்நாயக்கன்பட்டி, ரெங்கராஜபுரம், நெல்லூர், ஒட்டுப்பட்டி பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக சோளம், கம்பு போன்ற மானாவரி பயிர்கள் விளைச்சல் அதிகரித்துள்ளன. ஒருசில பகுதிகளில் அறுவடை துவங்கியுள்ளது. விளைநிலங்களில் விளைந்த சோளம், கம்பு போன்ற தானியங்களை கதிரிலிருந்து பிரித்தெடுக்க அய்யம்பாளையம்-சித்தையன்கோட்டை சாலை கதிடிரடிக்கும் உலர்களமாக சிறு, குறு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.