திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்தவர் ஷஹானா சதர் (26). கோழிக்கோடு தாரு நூஜூம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உளவியல்துறை தலைவராக பணியாற்றி வந்தார். வயநாடு கல்பற்றா வனப்பகுதியில் சுற்றுலா சென்றிருந்தார். அங்கு உள்ள ரிசார்ட் கூடாரம் ஒன்றில் 2 உறவினர்களுடன் தங்கி இருந்தார். இந்த ரிசார்ட்டை சுற்றி 3 பக்கங்களிலும் காடுகள் உள்ளன. இங்கே மொபைல் சிக்னல் கிடைக்காது.