கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 125வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் 7 கிமீ பேரணி நடத்தியது. இதில், முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: நேதாஜியின் 125வது பிறந்த நாளை மிக விமரிசையாக கொண்டாட வேண்டும். அவரது பிறந்த நாள் பராக்கிரம தினமாக கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கும் முன், அது குறித்து மோடி அரசு என்னுடன் ஆலோசிக்கவில்லை. யார் இந்த பெயரை தேர்வு செய்தது? அரசியல் ரீதியாக அவர்களுக்கு என்னை பிடிக்காமல் போகலாம். இந்த நாளை ஏன் தேச தலைவர்கள் தினமாக கடைபிடிக்கக் கூடாது. நேதாஜியின் பிறந்த நாளை அரசு தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்.நேதாஜியின் உறவினரிடமாவது எந்த வார்த்தையை தேர்ந்தெடுப்பது என்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து இருக்கலாம்.