விருதுநகர்: விருதுநகர் தலைமை தபால் நிலையம் துவங்கி பேராலி ரோடு வரையிலான நகராட்சியின் ஏஏ சாலை கடந்த மூன்று ஆண்டுகளாக ண்டும், குழியுமாக கிடக்கிறது. ஏஏ சாலையில் நூற்பாலைகள், பருப்பு, எண்ணெய் மில்களும், பேராலி ரோட்டில் பாலி பேக் கம்பெனிகள், நூற்பாலைகள், அட்டை நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. விருதுநகர் ஏஏ ரோடு வழியாக பேராலி ரோடு செல்ல வேண்டும். இந்நிலையில் ஏஏ ரோடு முழுவதும் குளங்கள் வெட்டியது போன்று பள்ளங்களாய் மாறியுள்ளன. அவற்றில் மழைநீரும், பாதளாச்சாக்கடை கழிவுநீரும் கலந்து தேங்கி குளங்களாக காட்சி அளிக்கின்றன. இதனால் சின்ன பேராலி, பெரிய பேராலி கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள், தொழிற்சாலைகளுக்கான கன்டெய்னர் லாரிகள், கனரக வாகனங்கள், கார்கள், டூவீலர்கள் சென்று வருவதில் சிரமங்கள் தொடர்கிறது.