கரூர், கரூர் மாவட்டம் ஏமூர் பகுதியில் நேற்று சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த கிளி ஜோசியர் ஒருவரிடம் சென்ற அமைச்சர், ₹100 கொடுத்து ஒரு சீட் எடுக்க சொல்லி கிளி ஜோசியம் பார்க்க தரையில் அமர்ந்தார்.