மும்பை: இந்தியாவில் சுமார் 30 லோன் ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது. டிஜிட்டல் மயமாகியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன்கள் மூலம் விரைவாக கடன் வழங்கும் நடைமுறை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கென இந்தியாவில் கடன் வழங்குவதற்கு ஆப்ஸ்கள் உள்ளன. பின் விளைவுகளை பற்றிக்கூட கவலைப்படாமல், அவசர தேவைக்கு பலர் இந்த ஆப்ஸ்கள் மூலம் கடன் வாங்குகின்றனர். டிஜிட்டல் கேஒய்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உடனே கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடனை செலுத்த முடியாமல் நிறுவனங்களின் மிரட்டல் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.