வேலூர்: தமிழகத்தில் 9 மத்திய சிறைகளில் பொங்கல் பண்டிகையை கொண்டாட 4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் தனிச்சிறைகள், 12 பார்ஸ்டல் சிறைகள், 5 துணை சிறைகள், 9 மாவட்ட சிறைகள், 95 கிளை சிறைகள், 2 திறந்தவெளி சிறைகள் உள்ளன. இதில் சிறைக்காவலர்களின் பணிப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை தவிர்க்க குடும்பத்துடன் அவர்கள் பொங்கல் கொண்டாடுவதற்கான சூழல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்காக 9 மத்திய சிறைகளில் பணியாற்றும் சிறைக்காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு மத்திய சிறைக்கும் தலா 50 ஆயிரம் வீதம் மொத்தம் 4.5 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.