பிறந்து 21 நாட்கள் ஆன பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு

பூந்தமல்லி: பூந்தமல்லியில் பிறந்து 21 நாட்கள் ஆன பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூந்தமல்லி கோரிமேடு, பாபாபீ தர்கா பகுதியை சேர்ந்தவர் முன்னா செரீப்(25), சமையல் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பர்க்கத் நிஷா(22). தம்பதியருக்கு கடந்த 21 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தாயிடம் குழந்தை பால் குடித்து கொண்டிருந்தபோது திடீரென மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்து பதறி அடித்துக் கொண்டு குழந்தையை பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இறந்து போன குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தையின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post பிறந்து 21 நாட்கள் ஆன பெண் குழந்தை திடீர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: