இந்த நிலையில் சற்று முன் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐந்து நாட்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து அறிவிப்பு வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி மே இரண்டாம் தேதி முதல் நான்காம் தேதி வரை வெப்ப அலை வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா, பீகார், மேற்கு வங்கத்தில் அதிக வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது; அண்டை மாநிலங்களான கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
The post மஞ்சள் எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் மே 2, 3, 4 ஆகிய தேதிகளில் வெப்ப அலை வீசக்கூடும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.