இதனால் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுவட்டார பகுதிகளில் வசித்த மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்ற பிரச்சனைகளால் அவதியுற்றனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறிய நிலையில் ஆலைக்கு விரைந்த தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் தண்ணீரை பீச்சியடித்து அமோனியா வாயு கசிவை கட்டுப்படுத்தினர். ஆலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வெளியேறிய கிராம மக்கள் தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளன. தற்போது அமோனியா வாயு கசிவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதேசமயத்தில் ஆலையில் மீண்டும் வாயு கசிவு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post கோவை அருகே உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையில் அமோனியா வாயு கசிவு: 2 கிலோ மீட்டர் தொலைவில் வசித்த மக்கள் வெளியேற்றம் appeared first on Dinakaran.