திருவெறும்பூர் : காவிரி டெல்டாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரியாற்றில் கல்லணைக்கு வரும் 3,509 கனஅடி நீர் முழுவதும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி டெல்டாவில் நடவு செய்யப்பட்டுள்ள சம்பா, தாளடி மற்றும் ஒருபோக நெற்பயிர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலை உருவாகியுள்ளது.