கம்பம்: கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில், கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததால், தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக புகார் தெரிவிக்கின்றனர். தேனி மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்களுக்கு நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. கம்பம் நகராட்சி அலுவலக வளாகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால், அதிகாரிகளின் மெத்தனத்தால் தொழிலாளர்கள் அவதிப்பட்டனர். பரிசு தொகுப்பு வழங்கும் நேரம் குறிப்பிடப்படவில்லை.