சென்னை: எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் கூட்டம் இல்லாததால் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு மிகவும் குறைவான ஆம்னி பஸ்களே இயக்கப்படுகின்றன. இதுகுறித்து அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் கூறியதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்குக்கு முன்பு 4 ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. பிறகு பொதுமுடக்கம் காரணமாக பஸ்கள் இயங்கப்படவில்லை. அதன்பிறகு வழங்கப்பட்ட தளர்வுகளின் அடிப்படையில் ஆம்னி பஸ்கள் ஓடத்தொடங்கின. ஆனால் பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு பள்ளி, கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள் செயல்படாதது தான் காரணம்.