அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தல் சாலை வியாபாரிகளுக்கு கடனை விரைந்து வழங்க வேண்டும்

சென்னை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள சாலை வியாபாரிகளுக்கு கடன் தொகை விரைந்து வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: சாலையோர வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்திலிருந்து 2.62 லட்சம் பேருக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 1.80 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதிலிருந்து கடன் வழங்க 44,000 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடன் வழங்கத் திட்டமிட்டுள்ள தொகையே ரூ.10,000 தான் என்கிற நிலையில் கடந்த 5 மாதங்களில் 27,055 பேருக்குதான் கடன் வழங்கப்பட்டிருப்பதாக வரும் செய்தி வருத்தமளிக்கிறது. கொரானாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் அவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதில் சிறு பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். அதை பெரிதுபடுத்தாமல் விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கடன் தொகையை விரைந்து வழங்கிட வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: