வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கோரி மாவட்ட கலெக்டரிடம் சென்னை முன்னாள் மேயர் மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஒன்றியம், வானகரம் ஊராட்சியில் உள்ள ராஜாஷ் கார்டன் பகுதியில் புதிதாக உருவாக்கப்பட்ட குடியிருப்பு பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சுமார் 700 வாக்காளர்களுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அவர்களின் பெயரை சேர்க்க வலியுறுத்தி முன்னாள் மேயரும் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தென்சென்னை திமுக மாவட்ட செயலாளருமான மா. சுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் அயப்பாக்கம் துரை வீரமணி, மதுரவாயல் பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் பொன்னையாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர் . இது சம்பந்தமாக தேர்தல் அதிகாரிகளை அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார் . இதனையடுத்து  அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Related Stories: