குமரி அனந்தன் குற்றச்சாட்டு தனியார் வசம் செல்கிறதா மத்திய திரைப்பட பிரிவு?

சென்னை: மத்திய திரைப்படப் பிரிவை அம்பானிக்கு தாரைவார்க்க பாஜ அரசு முயற்சித்து வருகிறது என காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வௌியிட்டுள்ள அறிக்கை: 1948ம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் நேருவால் உருவாக்கப்பட்டு 75வது ஆண்டை நெருங்கும் நிலையில் மத்திய திரைப்படப் பிரிவு மும்பையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு வரலாற்று சிறப்பு மிக்க கோப்புகள், சுதந்திர போராட்ட காட்சிகள், உப்பு சத்தியாகிரகம், தண்டி யாத்திரை போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை அழித்து விட்டால் காங்கிரஸ் செய்த சாதனைகள் வருங்கால சந்ததிகளுக்கு தெரியாமலே போய்விடும். இதை பிரபல தொழிலதிபர் அம்பானிக்கு தாரைவார்க்க முயற்சித்து வருகிறது பாஜ அரசு.

Related Stories: