சென்னை: சென்னை வடக்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்புக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தா. இளைய அருணா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னைவடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.