காஞ்சிபுரம்: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியில் புதிதாத மாநில, மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவராக அளவூர் நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சோனியா, ராகுல் காந்தி, கே.எஸ். அழகிரி ஆகியோரின் வழிகாட்டுதலில் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தில் முதன்மை மாவட்டமாக மாற்றுவேன். ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து புகையில்லா ஊராட்சியாக மாற்றி ராஜீவ் காந்தி விருது, தமிழக அரசின் விருது, பன்னாட்டு விருது என பல விருதுகளை வாங்கினேன். மத்திய பாஜ அரசு விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிராக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மக்கள் பிரச்னைகளுக்காகவும் காங்கிரஸ் கட்சியினர் சிறை செல்லவும் தயாராக இருக்கிறோம்.