காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆகம விதிப்படி பூஜைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம், பக்தர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் ஆகம விதிப்படி செய்ய வேண்டிய பூஜைகள் நடப்பது இல்லை. உதாரணமாக சந்திரசேகரர் (பலிநாயகர் ) சுவாமி எழுந்தருளும் நிகழ்வு காலை, மாலை வேளைகளில் நடக்கும். ஆனால், தற்போது, சந்திரசேகரர் (பலிநாயகர்) சுவாமி வராமலேயே பலி பூஜைகள் நடக்கின்றன.