இன்ஸ்பெக்டர் வீட்டில் 35 சவரன் கொள்ளை

ஆவடி: திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் வசிப்பவர் செல்லத்துரை(32). புளியந்தோப்பு காவல் நிலைய எஸ்ஐ. இவரது மனைவி செல்வியா(30). ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2ம் அணி இன்ஸ்பெக்டர்.

இவர்களது வீட்டின் பீரோவில் 50 சவரன் நகையை பூட்டி வைத்திருந்தனர். நேற்று முன்தினம் பீரோவை திறந்தபோது அதில் இருந்த 35 சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது. புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories: