திருமலை, :காவல்துறை மட்டுமின்றி எந்த துறையாக இருந்தாலும் உயரதிகாரிகளுக்கு, அவருக்கு கீழ் பணியாற்றுபவர்கள் சல்யூட் அடிப்பது, வணக்கம் செய்வது வழக்கமான ஒன்று. அப்படி கடந்த 30 ஆண்டுகளாக உயர் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சல்யூட் அடித்து பழகிய இன்ஸ்பெக்டர் முதன்முறையாக ஐபிஎஸ் படித்து உயரதிகாரியாக பணியாற்றி வரும் தனது மகளுக்கு சல்யூட் அடித்து ஆனந்த கண்ணீருடன் மரியாதை செய்துள்ளார்.அதன் விவரம்: திருப்பதி கல்யாணி அணை காவல் பயிற்சிப்பள்ளியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷாம்சுந்தர். இவரது மகள் பிரசாந்தி. கடந்த 2018ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்வு பெற்று ஆந்திர மாநிலம் குண்டூர் டவுனில் கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்.