சென்னை,:இன்று முதல் தமிழ்நாடு எனது மாநிலம் என்றும், நான் அதன் ஊழியன் என்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி கூறினார்.சென்னை உயர் நீதிமன்றத்தில், 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீப் பானர்ஜி, இன்று காலை 11.30 மணிக்கு பொறுப்பேற்றார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் வரவேற்றார். பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் இணை தலைவர் எஸ்.பிரபாகரன், வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசாள், லா அசோசியேசன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோரும் பேசினர்.
இதையடுத்து தலைமை நீதிபதி, ஏற்புரையாற்றி பேசியதாவது: