திருவனந்தபுரம் : இந்தியாவின் மிகவும் உயரமான சிவன் சிலை கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் இருந்து பூவாறு - கோவளம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஆழிமலை சிவன் ஆலயம். ஒரு பகுதி கடற்கரை சார்ந்தும் மற்றொரு பகுதி மலை சார்ந்தும் ஆலயம் அமைந்துள்ளதால் ஆழிமலை என்று பெயர் பெற்றுள்ளது. புகழ்பெற்ற ஆழிமலை சிவன் ஆலயத்தில் தற்போது 58 அடி உயரம் கொண்ட கங்காதரேஸ்வரா உருவத்தில் உள்ள சிவன் சிலையும், சிலையின் உட்பகுதியில் உள்ள பாறைகளை குடைந்து 3500 சதுர அடியில் தியான மண்டபம் அமைக்கும் பணியும் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.