திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகரஜோதி தரிசனத்துக்காக பக்தர்கள் குடில் அமைத்து தங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 30ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மறுநாள் 31ம் தேதி முதல் தினமும் 5,000 பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடக்கிறது. 20ம் தேதி காலை 6 மணிக்கு பந்தள ராஜ குடும்ப பிரதிநிதியின் தரிசனத்துக்கு பிறகு நடை அடைக்கப்படும். ெகாரோனா அச்சம் காரணமாக சபரிமலை மகரவிளக்கு பூஜை காலத்தில் நடக்கும் திருவாபரண பெட்டி ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. ஆபரண பெட்டிக்கு பக்தர்கள் வரவேற்பு அளிக்கவும், தீபாராதனை காட்டவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.