நொய்டா: தலைநகர் டெல்லியின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட முழு முராத்கரி கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுவனை கடந்த திங்கட்கிழமை அவனது தாய், அருகில் உள்ள கடைக்கு சென்று பொருட்களை வாங்கி வரச் சொல்லி அனுப்பினார். ஆனால், நீண்ட நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் கடந்த 5 நாட்களாக சிறுவனை தேடி வந்தனர்.