ஆவடி: ஆவடியை அடுத்த வீராபுரம் சந்தோஷ்மாதா நகரை சேர்ந்தவர் சக்திவேல் (23). இவர் அங்குள்ள புதிய கண்ணியம்மன் நகர் பஸ் நிலையத்தில் பேக்கரி நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி பேக்கரிக்கு 5 வாலிபர்கள் வந்து, கேக் வாங்கி சாப்பிட்டுள்ளனர். பின்னர் பணம் கொடுக்காமல் அங்கிருந்து சென்றுள்ளனர். இதனால் கடை உரிமையாளர், அவர்களை நிறுத்தி பணம் கேட்டபோது அவர்களை மிரட்டிவிட்டு சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அவர்கள் அனைவரும் கடந்த 31ம் தேதி மீண்டும் பேக்கரிக்கு வந்து ஓசிக்கு கேக் கேட்டு சக்திவேலுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.