காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு வாலிபர் தற்கொலை

புழல்: சென்னை புழல் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(29). கட்டிட தொழிலாளி. இவர் சென்னை சர்மா நகரை சேர்ந்த பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், விரக்தி அடைந்த அவர் நேற்று மதியம் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனைப் பார்த்த அவரது  அக்கா மீனா முத்துக்குமாரை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். சிகிச்சை பலனின்றி நேற்று முத்துக்குமார் இறந்தார்.

Related Stories: