சென்னை: சென்னையில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் வரும் 4ம் தேதி முதல் நிறுத்தப்படும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்புக்கு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: காலை, மாலை சென்னையில் இருந்து திருச்சி வழியாக மதுரை சென்று கொண்டிருக்கும் தேஜஸ் விரைவு ரயில் போதுமான பயணிகளின் ஆதரவின்மையால், வரும் 4ம் தேதி முதல் நிறுத்தப்பட உள்ளதாக ரயில்வே அறிவித்திருப்பது மிகவும் தவறான நடவடிக்கை ஆகும்.