திருக்கழுக்குன்றம்: மோடியை எதிர்க்கும் துணிச்சல், இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாருக்கும் இல்லை என தேசிய காங்கிரஸ் செயலாளர் விஸ்வநாதன் கூறினார். தேசிய காங்கிரஸ் செயலாளராக எம்பி விஸ்வநாதன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார்.இதையொட்டி, கல்பாக்கத்தில் உள்ள ராஜீவ் காந்தி, அம்பேத்கர், காந்தி ஆகிய சிலைகளுக்கு மாலையணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். காங்கிரஸ் கட்சியும், ஸ்டாலினை முதல்வராக்க விரும்புகிறது. ஏனென்றால், தென் மாநிலத்தில் மோடியை எதிர்க்கும் துணிச்சல், திராணி மிகப்பெரிய ஆளுமை கொண்ட ஆண்மகன் இந்திய அரசியலில் மு.க.ஸ்டாலினை தவிர வேறு யாரும் இல்லை. மு.க.ஸ்டாலின் தான் தன்னந்தனியாக மோடியை எதிர்க்கும் சிங்கக்குட்டியாக இருக்கிறார்.