பெங்களூரு: கர்நாடகாவில் புதிய மணல் கொள்கை புத்தாண்டு முதல் செயல்படுத்தப்படும் என்று கனிமவளத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீல் தெரிவித்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ``மாநிலத்தில் கட்டுமான பணிக்கு தேவைப்படும் பொருட்களில் அத்தியாவசியமானதாக மணல் உள்ளது. இதை மணல் மாபியா கும்பல் தங்களுக்கு சாதகமாக்கி கொண்டு கொள்ளை லாபத்தில் விற்பனை செய்கிறார்கள். இது நடுத்தர வர்க்கத்தினரை வெகுவாக பாதிக்கிறது. இதை தவிர்க்கும் நோக்கத்தில் புதிய மணல் கொள்கை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டது. இடையில் கொரோனா தொற்று பரவல் தடையாக இருந்ததால் செயல்படுத்தவில்லை.