புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசில் நகர்ப்புற மேம்பாடு, பொது நிர்வாகம், சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் வன உயிரியல் துறைகளுக்கு அமைச்சராக கோபால் ராய் பதவி வகிக்கிறார். தண்டுவடம் பாதிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக அவர் தீராதவலியால் அவதிப்பட்டு வந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன் அவருக்கு தண்டுவடத்தில் கோளாறு ஏற்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். எனினும், சமீபகாலமாக அவருக்கு தோள்பட்டை வலி அதிகரித்தது. அதனால் கடமையில் கவனம் செலுத்த முடியாமல் திண்டாடினார். மும்பையில் அதற்கான அதிநவீன ரோபோட்டிக் சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்து அமைச்சர் கோபால் ராய் தற்போது மும்பை சென்றுள்ளார்.