பெங்களூரு: மாநிலத்தின் அனைத்து மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரி திறக்கவேண்டும் என்பது அரசின் நோக்கமாகும் என அமைச்சர் சுதாகர் கூறினார். பெங்களூரு மாகடி ரோட்டில் \”ஆரோக்ய சவுதா\” கட்டிடத்தை முதல்வர் எடியூரப்பா திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சுதாகர் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பின் காரணமாக வளர்ச்சி பணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அது போன்ற சூழ்நிலையில் முதல்வர் எடியூரப்பா சுகாதார துறைக்கு அதிக நிதி அளித்துள்ளார். அதன் காரணமாக சுகாதார துறையின் சார்பில் கொரோனா வைரஸ் பரிசோதனை, மருத்துவ கருவிகள் கொள்முதல் பணிகள் நடந்துள்ளன. அத்துடன் சுகாதார நிலையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் எடியூரப்பாவின் உத்தரவின் பேரில் மாநிலத்தில் புதிதாக நான்கு மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளன. இதில் மூன்று மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. மாநிலத்தில் தற்போது 18 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. அதே நேரம் 9 மாவட்டத்தில் மருத்துவ கல்லூரிகள் இல்லை.