திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 25ம் தேதி முதல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வழக்கமாக இரண்டு நாளைக்கு மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு வந்த நிலையில் இம்முறை ஜனவரி 3ம் தேதி வரை 10 நாட்கள் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.