பெங்களூரு: என்னுடைய தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான நிதி உதவியை முதல்வர் எடியூரப்பா ஒதுக்கியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிஹெப்பாள்கர் பாராட்டு தெரிவித்தார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது, ``மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் மாநில முதல்வர் எடியூரப்பா ஏற்ற தாழ்வு பார்க்கவில்லை. என்னுடைய தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான நிதி உதவியை முதல்வர் எடியூரப்பா ஒதுக்கியுள்ளார். பெலகாவி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கட்சி பிரமுகர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.