எனது தொகுதியில் அனைத்து பணிகளும் நடக்கிறது முதல்வருக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ

பெங்களூரு: என்னுடைய தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான நிதி உதவியை முதல்வர் எடியூரப்பா ஒதுக்கியுள்ளார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிஹெப்பாள்கர் பாராட்டு தெரிவித்தார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது, ``மாநிலத்தில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதில் மாநில முதல்வர் எடியூரப்பா ஏற்ற தாழ்வு பார்க்கவில்லை. என்னுடைய தொகுதியில் அனைத்து வளர்ச்சி பணிகளும் நடைபெற்று வருகிறது.  இதற்கு தேவையான நிதி உதவியை முதல்வர் எடியூரப்பா ஒதுக்கியுள்ளார்.  பெலகாவி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக கட்சி பிரமுகர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

என்னுடைய தொகுதியில் மூன்று வார்டுகள் வருகிறது. மாநகராட்சி தேர்தல் குழுவில் நானும் உறுப்பினராக இருந்து வருகிறேன்.  இதனால் தேர்தலில் எப்படி வெற்றிபெறுவது என்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது’’ என்றார். இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முதல்வருக்கு ஆதரவாக பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: