இங்கிலாந்தில் நீருக்குள் மூழ்கிய காரில் உயிருக்கு போராடிய வயதான தம்பதியினர் மீட்பு

தோர்பே என்ட்: இங்கிலாந்தில் நீருக்குள் மூழ்கிய காரில் இரண்டு மணி நேரமாக உயிருக்கு போராடிய வயதான தம்பதியினர் பத்திரமாக மீட்கப்பட்டனர். நார்விச் பகுதியில் உள்ள தோர்பே என்ட் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று நிலைத்தடுமாறி அருகில் இருந்த ஆற்றுக்குள் மூழ்கியது.

யாரும் கவனிக்காத நிலையில் நீருக்குள் பெரும்பான்மையான பகுதிகள் மூழ்கிவிட்டது. தற்செயலாக அவ்வழியாக சென்றவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். 2 மணி நேரமாக நீருக்குள் மூழ்கி உயிருக்கு போராடிய தம்பதியை காவல்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

Related Stories: