புதுடெல்லி: கொரோனா பரவல் காரணமாக டிசம்பர் இறுதியில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இருநாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: டிசம்பர் இறுதியில் நடைபெற இருந்த இந்த ஆண்டுக்கான இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.