பாஜக கொள்ளையடித்த பணத்தில் தான் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது : அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசம்

விழுப்புரம்,  பாஜக கொள்ளையடித்த பணத்தில் தான் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது என்று அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கவர்னரிடம் வழங்கியுள்ளது. திமுக கூறி உள்ள குற்றச்சாட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும்போது ஏன் கவர்னரிடம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. இதனை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறோம், என்றார்.

மேலும் தமிழக மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில்தான் பொங்கல் பணம் ரூ.2,500 குடும்ப அட்டைக்கு வழங்குவது பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக கேட்டபோது, மத்திய பாஜக அரசு ரூ.6 ஆயிரம் விவசாயிகளுக்கு எந்த பணத்தில் இருந்து வழங்குகிறார்கள்? என கேள்வி எழுப்பினார்.

Related Stories: