விழுப்புரம், பாஜக கொள்ளையடித்த பணத்தில் தான் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குகிறது என்று அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சட்ட அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது : அதிமுக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை கவர்னரிடம் வழங்கியுள்ளது. திமுக கூறி உள்ள குற்றச்சாட்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் இருக்கும்போது ஏன் கவர்னரிடம் வழங்கினார்கள் என்று தெரியவில்லை. இதனை சட்டப்படி எதிர்கொள்ள இருக்கிறோம், என்றார்.