தேசிய விவசாயிகள் தினம்: ஜி.கே.வாசன் வாழ்த்து

சென்னை: தேசிய விவசாயிகள் தினத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்த போது விவசாயிகள் மட்டும் தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.

விவசாயிகள் துயரம் நீக்கவும், தொழில் உயரவும், வருமானம் பெருகவும், வழிகாணவும் மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் வளர்ச்சி பணிகளுக்கு துணைநின்று விவசாயிகள் வாழ்வு, வளம் பெற என்றும் துணை நிற்போம். விவசாயிகள் அனைவருக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories: