சென்னை: தேசிய விவசாயிகள் தினத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆண்டுதோறும் டிசம்பர் 23ம் தேதியை தேசிய விவசாயிகள் தினமாகக் கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் விவசாயிகளின் கடின உழைப்பை போற்றுவோம். நன்றி கூறுவோம். கொரோனா காலத்தில் உலகமே முடங்கி இருந்த போது விவசாயிகள் மட்டும் தான் தங்கள் விவசாயப் பணியை தொடர்ந்து செய்து அனைவரது பசியை போக்கினர் என்பதை இந்த நாளில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.