ஜம்மு காஷ்மீரில் தாக்குதல் நடத்த வந்த 2 தீவிரவாதிகள் சரண்

ஸ்ரீநகர்: பாகிஸ்தானில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள், ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். சில நேரங்களில் உள்ளூர் தீவிரவாதிகளின் தாக்குதலும் நடக்கிறது.  இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள டங்டூடா என்ற கிராமத்தில் 2 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த பதுங்கி இருப்பதாக, பாதுகாப்பு படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே, அந்த பகுதியை பாதுகாப்பு படை சுற்றி  வளைத்தது. அவர்கள் உள்ளூர் தீவிரவாதிகள் என தெரிந்ததும், அவர்களின் குடும்பத்தினரை பாதுகாப்பு படை அழைத்து வந்து, அவர்களின் மூலம் சரணடையும்படி  வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து, 2 தீவிரவாதிகளும் ஆயுதங்களை  ஒப்படைத்து சரணடைந்தனர். இந்நிலையில், ராஜோரி மாவட்ட எல்லையின் பல்வேறு இடங்களில்  பாகிஸ்தான் ராணுவம் நேற்றும் சிறிய ரக வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த   தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

Related Stories: