செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் அடுத்த சாலூர் பகுதியை சேர்ந்தவர் அகத்தியன் (32). கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் அகத்தியன் வீட்டில் இருந்தார். அப்போது, அங்கு வந்த மர்மநபர்கள் சிலர், அவரையும் குடும்பத்தினரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு சென்றனர். இதில் படுகாயடைந்த அகத்தியன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக, திருக்கழுக்குன்றம் போலீசில் அகத்தியன் புகார் அளித்தார். அதில், அதிமுக பிரமுகர், முன் விரோதம் காரணமாக, அடியாட்களை வைத்து, தன்னையும், தனது குடும்பத்தினரையும் வீடு புகுந்து தாக்கியதாக கூறியிருந்தார். ஆனால், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், புகார் கூறப்பட்ட அதிமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கழுக்குன்றம் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 100க்கு மேற்பட்ட பெண்கள், செங்கல்பட்டு எஸ்பி அலுவலகத்துக்கு நேற்று சென்றனர்.