சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள திமுக அலுவலகத்தில், அதிமுகவைச் சேர்ந்த கோவை மாநகராட்சி முன்னாள் மேயரும்-மாவட்ட முன்னாள் செயலாளருமான கணபதி ராஜ்குமார் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, எம்.பி., கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கோவை கார்த்திக் எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.
அதே போல் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பாஜ மாநில மருத்துவ அணி முன்னாள் தலைவரும் - அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்க நிறுவனருமான டாக்டர் டி.கயிலைராஜன் தலைமையில், பாஜவைச் முன்னாள் மாநில விவசாய அணி துணை முன்னாள் செயலாளர் ஏ.ஜி.கலாநிதி, இந்தியன் வங்கி சங்கத்தின் மாநிலத் தலைவர் செல்வ தியாகராஜன், மற்றும் அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மகாஜன சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவஞானம், வடமதுரையைச் சேர்ந்த முருகேசன், பூமிநாதன், தூத்துக்குடி மாவட்டம் தொட்டம்பட்டி பி.பெருமாள், இலந்தம்பட்டியைச் சேர்ந்த எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.கருத்தபாண்டி, ஆர்.ராமசுப்பு, விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வடமலகுறிச்சி ஏ.செல்வம், கோமிங்கபட்டி ஏ.செல்வபாண்டி, ஆர்.தங்கமாரி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சீலியம்பட்டி ஜி.ரவீந்திரபாண்டியன், முத்துலாபுரம் எம்.ரஞ்சித், எரசக்கநாயக்கனர் கே.சின்னகருப்பையா, சின்னமனூர் எஸ்.செல்வகுமார், சீலியம்பட்டி ஏ.ராஜசேகர், எஸ்.சுருளியப்பன் ஆகியோரும்; மதுரை வடக்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த பகுதி மீனவர் அணிச் செயலாளர் பி.திருஞானசம்பந்தம் தலைமையில், தே.மு.தி.க.வைச் சேர்ந்த பகுதி இளைஞர் அணி முன்னாள் செயலாளர் எம்.கார்த்திகை ராஜா, 24வது வட்ட முன்னாள் செயலாளர் கே.வெள்ளத்துரை, உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எம்.அலாவுதீன் இணைந்தனர்.