சாத்தூர்: பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்வரும் தேர்தலில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என்று சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன்; இந்த கருத்தை கூறினார். விருதுநகர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அதிமுக தோற்றதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே காரணம் என்று ராஜவர்மன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம்: சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேச்சால் பரபரப்பு
- ராஜேந்திர பாலாஜி
- பேச்சு
- தொகுதியில்
- விருதுநகர் மாவட்டம்
- சத்தூர் அதிமுக
- பரபரப்பை
- சட்டமன்ற உறுப்பினர்
- Rajavarman