சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: வரும் பொங்கல் பண்டிகைக்கு குடும்பத்திற்கு தலா 2500 பண்டிகை பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர், அதிமுக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். மக்கள் வரிப்பணத்தில் அறிவிக்கும் அரசு திட்டங்களை ஆளுங்கட்சியின் உதவித் திட்டமாக சித்தரிப்பது தேர்தல் ஆதாயம் தேடும் முயற்சியில் அதிமுக தொடர்ந்து மரபுகளை நிராகரித்து வருகிறது. சாகுபடி செய்த பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி அழுகிப் போனதால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு ஏக்கருக்கு ₹30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.