அயோத்தி: ‘அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்கு மாற்றாக கட்டப்படும் புதிய மசூதிக்கு வருகிற குடியரசு தினத்தன்று அடிக்கல் நாட்டப்படும்,’ என அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தப்பிரதேச மாநிலம், அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரியதாக இருந்த இந்த இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் எனவும், மசூதி இருந்த இடத்துக்கு பதிலாக வேறு பகுதியில் புதிய மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கும்படியும் கடந்தாண்டு நவம்பர் 9ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து வருகிறது. அதேபோல், மசூதி கட்டுவதற்காக உபி மாநிலத்தில் உள்ள தானிபூர் கிராமத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.