புதுடெல்லி: டெல்லியில் வரலாறு காணாத அளவுக்கு பனிக்காற்று வீசுகிறது. இதனால் நகரில் இயல்பு வெப்பநிலை குறைந்து போய் உள்ளது. இமயமலை பகுதியில் இருந்து வீசும் காற்று டெல்லியை எட்டியதால் இந்த குளிர் சூழல் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்து உள்ளது. டெல்லியில் நேற்று குறைந்தபட்சமாக 5.8 டிகிரி செல்சியஸ் வெப்பமும், அதிகபட்சமாக 18.6 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானது. அடர் பனி காரணமாக பார்வை திறன் 100 மீட்டராக குறைந்தது. நேற்று காலை பாலம் பகுதியில் பார்வைதிறன் மிகவும் குறைந்தது. இதனால் வாகனங்களில் முகப்பு விளக்கு எரியவிடப்பட்டது.