வாஷிங்டன்: வாஷிங்டனில், மகாத்மா காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தும் பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த போராட்டத்தில், ஊடுருவிய காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகள், வன்முறையை அரங்கேற்றியதுடன், மகாத்மா காந்தி சிலையை அவமதிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். காந்தி சிலையின் முகத்தில் போஸ்டர் ஒன்றை ஒட்டினர். சிலை முழுவதும் கண்டன போஸ்டர்களை ஒட்டினர். இதற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தை இந்திய தூதரகம் வலியுறுத்தியது.