கடையில் திருடிய தாய், மகள் கைது

ஆலந்தூர்: உள்ளகரம் மேடவாக்கம் பிரதான சாலையில் பாதாள விக்னேஷ்வர் ஆலயம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நேற்று பொருட்கள் வாங்குவதுபோல் வந்த 2 பெண்கள், முந்திரி, பாதாம் போன்றவற்றை திருடி, தங்கள் உள்ளாடைக்குள் பதுக்கியுள்ளனர். இதை சிசிடிவி கேமராவில் கண்காணித்த கடை ஊழியர்கள், அந்த பெண்களை பிடித்து, பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த நாகஜோதி, (60), அவரது மகள் பேச்சியம்மாள் (35) என தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர்.

Related Stories: