தும்கா: ஜார்க்கண்ட் மாநிலம் தும்காவில் உள்ள சிடோ - கன்ஹு முர்மு பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் (வெபினார்) மூலம் தேசிய மனித உரிமை தினம் கடைபிடிக்கப்பட்டது. ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் புல்பூல் தார் ஜேம்ஸ் இந்த வெபினாரில் சிறப்புரையாற்றினார். அப்போது, திடீரென ஆபாச புகைப்படத் தொகுப்பு ஒன்று திரையில் காட்டப்பட்டது. அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழக நிர்வாகத்தினர் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்தனர். சிறிது நேரத்தில் அந்த புகைப்படத் தொகுப்பு மாயமானது,. இவ்விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் சோனா ஜாரியா மின்ஜ், போலீசில் புகார் அளித்தார்.