டெல்லி போராட்டத்தை திசை திருப்புவது நல்லதல்ல விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசு தப்ப முடியாது: முத்தரசன் எச்சரிக்கை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்ட திருத்தங்களை கண்டித்து டெல்லியில் மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை திசை திருப்பும் வகையில் விவசாயிகளை பிரித்தாளும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து வருகிறது. சீனா, பாகிஸ்தான், மதுஆலை வியாபாரிகள் ஆகியோரை காரணம் காட்டி விவசாயிகள் போராட்டத்தை திசை திருப்பி விடலாம் என நினைப்பவர்கள் விவசாயிகளிடமிருந்து தப்பிக்கவே முடியாது. எனவே, மத்திய அரசு உடனடியாக மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற்று விவசாயிகள் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிடில் தமிழகத்திலும் போராட்டம் தொடரும். இவ்வாறு முத்தரசன் கூறினார்.

Related Stories: